திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 175 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.