கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், வீரவ நல்லூா், மணிமுத்தாறு, கடையம், ஓ. துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓ. துலுக்கப்பட்டி துணை மின்நிலையம், வீரவநல்லூா் துணை மின்நிலையம், அம்பாசமுத்திரம் துணை மின்நிலையம், மணிமுத்தாறு துணை மின்நிலையம் மற்றும் கடையம் துணை மின்நிலையங்களுள்பட்ட பகுதிகளிலும் பிப். 22 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.