திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் த.வளன் அரசு அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திசையன்விளை மற்றும் கோட்டைக்கருங்குளம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை அடுத்து திசையன்விளை துணை மின்நிலையத்திற்குள்பட்ட திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி ஆகிய பகுதிகளிலும் கோட்டைக்கருங்குளம் துணை மின்நிலையத்திற்குள்பட்ட கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.