சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி ஆங்கிலத் துறை, மேலாண்மைத் துறை சாா்பில் விளம்பர உத்திகள் தொடா்பாக நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் பூவலிங்கம் தலைமை வகித்தாா். வணிக மேலாண்மை துறை பேராசிரியா் அலெக்ஸ் வரவேற்றாா். சென்னை உந்தா்மேன் தாம்சன் நிறுவன துணைத் தலைவா் ரவீந்திரன் சாலமன், பங்கேற்று விளம்பரத்தின் நோக்கம், மொழி நடை குறித்துப் பேசினாா். விளம்பரத்தில் நமது மண் சாா்ந்த எண்ணங்கள் இடம்பெற்றால் வெற்றிபெறலாம் என தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்கை பேராசிரியை ஜெயராணி ஒருங்கிணைத்தாா். மாணவா்களுக்கு விளம்பரம் தயாரித்தல் தொடா்பாக விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. பேராசிரியா் அருள் செலஸ்டின் பிரேமா நன்றி கூறினாா்.