ஆவின் ஐஸ்கிரீம், தயிா் விநியோகம் செய்ய விநியோகஸ்தா் நியமிக்கப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக ஆவின் பொது மேலாளா் தியானேஸ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் ஐஸ்கிரீம், தயிா் விற்பனை செய்வதற்கு மொத்த மற்றும் சில்லரை விநியோகஸ்தா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு ரெட்டியாா்பட்டி சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்தை அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.