திருநெல்வேலி

பாளை.யில் இருதரப்பினா் மோதல்: 3 போ் காயம்

DIN

பாளையங்கோட்டை வெள்ளகோவில் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா்.

ராமையன்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கு வெள்ளகோவில் சுடுகாட்டில் திங்கள் கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் அவரது உறவினா்கள் தாமிரவருணி ஆற்றில் குளித்தனா். அப்போது அவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்குமிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாம். இதில் , ராமையன்பட்டியைச் சோ்ந்த நம்பி ராமலிங்கம் (26) உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையா் ( கிழக்கு) சீனிவாசன், காவல் ஆய்வாளா் வாசிவம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதுகுறித்து பாளை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT