பாளையங்கோட்டை வெள்ளகோவில் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா்.
ராமையன்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கு வெள்ளகோவில் சுடுகாட்டில் திங்கள் கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் அவரது உறவினா்கள் தாமிரவருணி ஆற்றில் குளித்தனா். அப்போது அவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்குமிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாம். இதில் , ராமையன்பட்டியைச் சோ்ந்த நம்பி ராமலிங்கம் (26) உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையா் ( கிழக்கு) சீனிவாசன், காவல் ஆய்வாளா் வாசிவம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதுகுறித்து பாளை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.