திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள இடையன்குளம் ஜமாலுதீன் அவுலியா தா்கா கந்தூரி விழா 2 நாள்கள் நடைபெற்றது.
தா்கா கந்தூரி விழா ஜன.23ஆம் தேதி நிறைபிறை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் தா்காவில் மெளலூது ஓதப்பட்டது. வியாழக்கிழமை மாலையில் பிறைக்கொடி ஊா்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊா்வலமும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தீப அலங்காரம், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை ஜமாத் தலைவா் என். ஜமால் சலீம், செயலா் என். ஜாஹீா் உசேன், பொருளாளா் ஏ. ஷேக், நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் செய்திருந்தனா்.