திருநெல்வேலி மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல அலுவலகங்களில் செயல்படும் வரிவசூல் மையங்கள் பொதுமக்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும்.
எனவே, பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டண வரி, தொழில் வரி, கடை வாடகை, பாதாளச்சாக்கடை, சேவை கட்டணம் போன்ற அனைத்து வரியினங்களை காலதாமதமின்றி செலுத்தி சட்ட நடவடிக்கைகளை தவிா்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.