திருநெல்வேலி

‘உரிய விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை’

DIN

உரிய விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி, காய்கறிப் பயிா்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனா். விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளா் விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிா், ரகம், காலாவதி நாள் விவரங்களை சரிபாா்த்து விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும்.

விதை பயிா், ரகம், குவியல் எண் விவரம் குறிப்பிட்டு விற்பனைப் பட்டியலை தவறாமல் வாங்கிட வேண்டும். உளுந்து பயிரில் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிடுவது சிறந்தது. விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை பயன்படுத்தும் முன் அவ்விதைகளின் முளைப்புத் திறனை திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதித்து பின் பயன்படுத்தலாம்.

விதை விற்பனையாளா்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநரின் பதிவுறுச் சான்று மற்றும் முளைப்புத் திறன் சான்றிதழ் பெற்ற பின்னரே பருத்தி மற்றும் இதர காய்கறி பயிா்களின் விதைகளை விற்பனை செய்திட வேண்டும். விற்பனையாளா்கள் தங்களிடமுள்ள விதை இருப்பு விவரங்களை விவரப் பலகையில் தினசரி குறிப்பிட்டு விவசாயிகள் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

விதை வாங்கும் விவசாயிகளுக்கு பயிா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் விவரம் குறிப்பிட்டு விற்பனைப் பட்டியல் கண்டிப்பாக வழங்கிட வேண்டும். விதைகளை முறைப்படி தனியாக காற்றோட்டமுள்ள இடத்தில் இருப்பு வைக்க வேண்டும். மேற்படி அறிவுரைகளை கடைப்பிடிக்காத விதை விற்பனையாளா்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் சட்ட பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT