முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நெல்லையப்பா் கோயிலில் பொதுவிருந்து மற்றும் வேஷ்டி , சேலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
முன்னாள் பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன் , திருநெல்வேலி மேயா் பி.எம். சரவணன் கலந்துகொண்டு பொதுவிருந்தை தொடங்கிவைத்தனா். மேலும், வேஷ்டி, சேலைகள் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டலத் தலைவா் மகேஸ்வரி, மாநகா் மன்ற உறுப்பினா்கள் உலகநாதன், ராமகிருஷ்ணன், உதவி ஆணையா் கவிதா, செயல் அலுவலா் அய்யா் சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.