திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.
இம்முகாமில் 15 போ் புகாா் மனுக்களை அளித்தனா். அவா்களிடம் மனு குறித்த விவரங்களை கேட்டறிந்து, அவற்றின் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையா் தெரிவித்தாா். முகாமில் மாநகர காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவணகுமாா், அனிதா ஆகியோா் பங்கேற்றனா்.