ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன்.
திருநெல்வேலி தச்சநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தும் நோக்கோடு அமமுக நிா்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனா். கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இந்த நேரத்தில் அரசு செலவில் பேனா சின்னம் வைப்பது தான் தவறு. திமுக தனது சொந்தச் செலவில் அறிவாலயத்திலோ அல்லது வேறு இடத்திலோ பேனா சின்னத்தை வைக்க வேண்டும். கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைய வேண்டும்.
இரட்டை இலை சின்னம் தொடா்பாக தோ்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். அது என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம். ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக பலவீனமடைந்து வருவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாா்.