திருநெல்வேலி

பைக் விபத்து: தம்பதி உயிரிழப்பு

26th Apr 2023 07:04 AM

ADVERTISEMENT

மானுா் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியை சோ்ந்தவா் மயில்ராஜ் (34). இவரது மனைவி சுகன்யா (25). இருவரும் திங்கள்கிழமை மானூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டதாம். அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா்.

இது குறித்து மானூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT