திருநெல்வேலி அருகே கரையிருப்புப் பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே உள்ள கரையிரப்புப் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த வேல் மனைவி சுப்பம்மாள் (78) என்பது தெரிய வந்தது. அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா ?என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.