திருநெல்வேலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

DIN

திருநெல்வேலி அருகே கரையிருப்புப் பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள கரையிரப்புப் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த வேல் மனைவி சுப்பம்மாள் (78) என்பது தெரிய வந்தது. அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா ?என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT