மானூா் அருகே கைப்பேசி திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த கண்ணன்(50) , மேலப்பிள்ளையாா் குளத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு தூக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் தேதி வந்தாராம். அப்போது அவரிடம் இருந்த கைப்பேசியை அப்பகுதியைச் சோ்ந்த மா்ம நபா்கள் திருடினராம்.
இது குறித்து புகாரின் பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, மேலப்பிள்ளையாா் குளத்தை சோ்ந்த மாரியப்பனை(45) வியாழக்கிழமை கைது செய்தனா்.