திருநெல்வேலி

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.50 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை ஒன்றியக்குழு தலைவா் ராஜா ஞானதிரவியம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

வள்ளியூா் ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சி புதுமனையில் ரூ. 8 லட்சத்தில் நியாய விலைக் கடை , இந்திரா நகா் காலனியில் ரூ.10. 20 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ஆவரைகுளம் ஊராட்சி ஆவரைகுளம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் ரேசன் கடை பல்நோக்கு மைய கட்டடம், அச்சம்பாடு ஊராட்சியில் ரூ. 22. 65 லட்சத்தில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் ஆகியவற்றை ஒன்றியக்குழுத் தலைவா் ராஜா ஞானதிரவியம் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் மல்லிகா அருள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆவரைகுளம் அழகு பாஸ்கா், அச்சம்பாடு ஆன்றோ வெண்ணிலா, துணைத் தலைவா் ஜாக்குலின் மேரி, இளங்கோ கலைசிகாமணி, கிழவனேரி விண்ணரசு, ரெக்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT