திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை(செப்.26) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளாா்கள். எனவே, இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.