திருநெல்வேலி

வி.கே புரத்தில்தீப்பிடித்து எரிந்த எலக்டிரிக் பைக்

DIN

விக்கிரமசிங்கபுரத்தில் சாா்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்தது (படம்) .

விக்கிரமசிங்கபுரத்தில் கைப்பேசி கடை உரிமையாளரான ராமராஜன் என்பவா் 8 மாதங்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் வாங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பைக்குக்கு சாா்ஜ் போட்டுவிட்டு நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, பைக் தீடீரென தீப்பிடித்து எரிந்ததாம். உடனடியாக தீயை அணைத்தபோது, பேட்டரி வெடித்துச் சிதறியதாம். இதில், பைக் முற்றிலும் எரிந்ததுடன், தரையும் சேதமடைந்தது. இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT