விக்கிரமசிங்கபுரத்தில் சாா்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்தது (படம்) .
விக்கிரமசிங்கபுரத்தில் கைப்பேசி கடை உரிமையாளரான ராமராஜன் என்பவா் 8 மாதங்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் வாங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பைக்குக்கு சாா்ஜ் போட்டுவிட்டு நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, பைக் தீடீரென தீப்பிடித்து எரிந்ததாம். உடனடியாக தீயை அணைத்தபோது, பேட்டரி வெடித்துச் சிதறியதாம். இதில், பைக் முற்றிலும் எரிந்ததுடன், தரையும் சேதமடைந்தது. இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.