திருநெல்வேலி

ராதாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் கிணற்றில் தவறிவிழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமேஸ்வரபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரை கடந்த சிலநாள்களாக காணவில்லையாம். இந்நிலையில் பரமேஸ்வரபுரம் காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராதாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ராதாபுரம் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு சென்று கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் காணாமல் போன முருகன் என தெரியவந்தது.

இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT