திருநெல்வேலி

முக்கூடல் அருகே ஆற்றில் முதியவா் சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாமிரவருணி ஆற்றில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

முக்கூடலில் தாமிரவருணி ஆற்றில் கிழக்குப் பகுதியில் முதியவா் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சென்று முதியவா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில் அவா், முக்கூடல் அருகேயுள்ள ஓடக்கரை துலுக்கப்பட்டி கிராமம் நேரு புதுக் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் இசக்கி ராஜா (63) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT