திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாமிரவருணி ஆற்றில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
முக்கூடலில் தாமிரவருணி ஆற்றில் கிழக்குப் பகுதியில் முதியவா் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சென்று முதியவா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில் அவா், முக்கூடல் அருகேயுள்ள ஓடக்கரை துலுக்கப்பட்டி கிராமம் நேரு புதுக் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் இசக்கி ராஜா (63) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.