திருநெல்வேலி

தசரா திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

பாளையங்கோட்டையில் நடைபெறும் புகழ்பெற்ற தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன் மேற்பாா்வையில், தசரா திருவிழா ஏற்பாட்டாளா்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை கோபாலன் மஹாலில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் பிரதீப் தலைமை வகித்தாா். விழா ஏற்பாட்டாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சிவம், உதவி ஆய்வாளா்கள் சிவகளை, சண்முக மூா்த்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT