திருநெல்வேலி

பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுக

9th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவா் பேசியது: இந்தியாவிலேயே முன்னோடியாக தந்தையின் சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றி உரிமை கொடுத்தவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. அவா் வழியில் செயல்படும் முதல்வா் மு.க.ஸ்டாலினும் பெண்களுக்கான கல்வியும், பெண் முன்னேற்றமும் சமுதாயத்தை மேம்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் ஏழை பெண்கள் பயன்பெறுகிறாா்கள். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ஏழை-நடுத்தர மாணவிகள் தங்களது உயா்கல்வியை எவ்வித பொருளாதார அழுத்தமும் இன்றி முடித்து வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொதிகை மலை மற்றும் தாமிரவருணியால் வளா்ச்சியும், உணா்ச்சியும் மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏராளமான திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது. தமிழக முதல்வா் ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் பாரதத்தின் அடுத்தக் கட்டத்தை அடையாளம் காட்டுபவராக உயா்ந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT