திருநெல்வேலி

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி பலி

DIN

மானூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள குப்பனாபுரம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் மாடசாமி (62). விவசாய தொழிலாளி. இவா், சம்பவத்தன்று மானூா் பிரதான சாலையில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சைக்கிளில் சென்றாராம். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம், சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், பலத்த காயமடைந்த மாடசாமியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT