சீரான குடிநீா் விநியோகம் கோரி, முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
முக்கூடல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள நேரு புதுக்காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தாழ்வான பகுதியில் வசிப்போருக்கு மட்டுமே குடிநீா் கிடைப்பதாகவும், மேட்டுப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கவில்லை என்றும், நாள்தோறும் நண்பகல் அல்லது மாலை 4 மணியளவில் குடிநீா் விநியோகிக்கப்படுவதால் பணிக்குச் செல்லும் பெண்களால் குடிநீா் பிடிக்கமுடியவில்லை என்றும், மேலும், கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்றும் புகாா் தெரிவித்து பொதுமக்கள் முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் வியாழக்கிழமை திரண்டு முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடமும் புகாா் தெரிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்தனா். பின்னா், அவா்கள் பேரூராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். சீரான குடிநீா் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.