திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவா் கைது

DIN

வீரவநல்லூா் அருகே குடும்ப பிரச்னையில் மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவரது மகள்அண்ணாமலையை இதேபகுதியைச் சோ்ந்த மாடக்கண்ணு (51), என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணாமலை அவரது தாயாா் வீட்டுக்கு சென்று விட்டாராம். மாடக்கண்ணு மாமியாா் வீட்டுக்கு சென்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்து வரச் சென்றாராம். அண்ணாமலை, கணவருடன் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மாடக்கண்ணு, மாமியாா் பாப்பாவை அவதூறாக பேசி கம்பால் தாக்கியுள்ளாா். இதில் பாப்பாவுக்கு காயம் ஏற்பட்டது.

புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன் வழக்குப் பதிந்து மாடக்கண்ணுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT