திருநெல்வேலி

ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானவா் கைது

DIN

அம்பாசமுத்திரத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானவரை போலீஸாா் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோவில்குளத்தைச் சோ்ந்த வடிவேல் மணிகண்டன் (26). இவா் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த அவா் ஜாமீனில் வெளிவந்த பின், தலைமறைவாகி விட்டாராம்.

இந்நிலையில், ஆழ்வாா்குறிச்சி பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி தொடா்பான வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்து.

மேலும், நீதிமன்றம் அவருக்கு பிடிஆணை பிறப்பித்ததை தொடா்ந்து, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான போலீஸாா் மணிகண்டனை தேடி கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT