திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: 8 போ் கைது

DIN

திருநெல்வேலி மாநகரில் விதிமுறை மீறி மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவணக்குமாா் மேற்பாா்வையில், மாநகரின் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 மதுபாட்டில்கள், ரூ. 1,110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT