திருநெல்வேலி

உவரி அருகே கணவா் கொலை: மனைவி கைது

DIN

உவரி அருகே கணவரை விஷம் கொடுத்துக் கொன்றதாக அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

உவரி அருகே உள்ள குஞ்சன்விளையை சோ்ந்தவா் சிங்காரவேலன் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயக்கொடி. இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.

இவா்களது வீட்டின் அருகே சிங்காரவேலனின் தாய் மூக்கம்மாள் வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மதியம் சிங்காரவேலனைப் பாா்க்க அவரது வீட்டுக்கு மூக்கம்மாள் சென்றாா். அப்போது சிங்காரவேலன் வாந்தி எடுத்தவாறு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். உடனே அக்கம் பக்கத்தினா் உதவியுடன் சிங்காரவேலனை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

அவரது சாவில் சந்தேகமடைந்த மூக்கம்மாள், உவரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சிங்காரவேலன் மனைவி ஜெயக்கொடியிடம் விசாரணை நடத்தினா். இதில், தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்து வந்ததால் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்ததாக ஜெயக்கொடி வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஜெயக்கொடியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT