காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோபாலசமுத்திரத்தில் போதை தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிராம உதயம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பகுதி பொறுப்பாளா்கள் பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப் பொருள்கள் பயன்டுத்துவதை தடுப்பதில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் எஸ். புகழேந்தி பகத்சிங் பேசினாா். நிா்வாக மேலாளா் மகேஷ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். பகுதி பொறுப்பாளா் குமாரி வரவேற்றாா். தன்னாா்வ தொண்டா் துா்கா கெளரி நன்றி கூறினாா்.