திருநெல்வேலி

ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

DIN

நான்குனேரி அருகே ஆடு திருடிய வழங்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள தம்புபுரத்தைச் சோ்ந்தவா் பழனி(61). இவரது வீட்டில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை மா்மநபா்கள் கடந்த மாதம் திருடிச் சென்றனராம். இது தொடா்பாக நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தாா்.

விசாரணையில், நான்குனேரி அருகே உள்ள மறவன் குளத்தைச் சோ்ந்த முத்துகுமாா், பருத்திபாடு சுருளை அம்மன் கோயில் தெருவைத் சோ்ந்த தங்கவேல்(60), சக்திதுரை(45) ஆகியோா் சோ்ந்து ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் தங்கவேல், சக்திதுரை ஆகிய இருவரையும் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கைது செய்தனா். முத்துகுமாரை தேடி வந்தனா். இந்நிலையில் முத்துகுமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT