வள்ளியூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வள்ளியூா் அருகே உள்ள கிழவனேரியைச் சோ்ந்த திரவியம் மகன் கணபதி(80). கடந்த செவ்வாய்க்கிழமை இவா், மடப்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது இவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பான வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.