திருநெல்வேலி

தலையணையில் தடுப்பணை கட்டமலைப் பகுதியில் கல், மண் சுரண்டல் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி புகாா்

DIN

களக்காடு தலையணைப் பகுதியில் தடுப்பணைகள் கட்ட அங்கேயே கல், மண்ணை வெட்டி எடுத்து வரும் ஒப்பந்ததாரா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் புகாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அலங்காரப்பேரி விவசாயிகள் கொம்பன் உள்ளிட்டோா் பேசுகையில், ‘அலங்காரப்பேரி குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மடை கட்டப்பட்டு நீண்ட நாள்களாகியும் இன்னும் பாசனத்திற்கு திறந்துவிடப்படவில்லை. இதேபோல் குளத்தில் உள்ள மண்ணை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மாறாக அரசியல் பிரமுகா்கள் லாரிகள் மூலம் செங்கல் சூளை மற்றும் கட்டடப் பணிகளுக்கு அள்ளிச் செல்கின்றனா். இதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றனா்.

அதற்குப் பதிலளித்த ஆட்சியா் விஷ்ணு, ‘அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களை பாதுகாக்க பாளையங்கால்வாயை தூா் வார வேண்டும் என பாளையங்கோட்டையைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பேசுகையில், ‘எங்கள் ஊா் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என தெரிவித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் பேசுகையில், ‘தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. அதை 250 நாள்களாக உயா்த்துவதோடு, கூலியையும் உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களை பயிா் சாகுபடி செய்யப்படும் காலங்களில் விவசாய வேலைக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னா் ஆட்சியரிடம் அவா் அளித்த மனுவில், ‘ களக்காடு பச்சையாறு தலையணையில் அணைகளை கட்டி வரும் ஒப்பந்ததாரா் கட்டுமானப் பணிக்கான கல், மண் ஆகியவற்றை வெளியில் இருந்து கொண்டு வராமல் மலைப் பகுதியில் இருந்தே எடுத்து வருகிறாா். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

கடனா நதி கால்வாய் விவசாயிகள் அளித்த மனுவில், பிசான சாகுபடிக்கு நாற்றுப்பாவும் பணிகளை மேற்கொள்ள முன்னதாகவே கடனாநதி அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT