திருநெல்வேலி

ஓய்வுபெற்றோா் நலஅமைப்பு போராட்டம்

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருணை அடிப்படையில் வாரிசு வேலைகளை முறைப்படுத்தி வழங்க வேண்டும். போக்குவரத்துக்கழக பணியாளா்களுக்கான ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த நிதி ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த உயா்வுகளின் படி ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் தாணு மூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சேதுராமலிங்கம், எட்டப்பன், மாரிமுத்து, சுப்பையா, மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் முத்துக்கிருஷ்ணன், மாநில குழு உறுப்பினா் சிவஞானதாஸ், பழனி, வெங்கடாசலம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநில குழு செயலா் ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

SCROLL FOR NEXT