கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்இணைப்புப் பெயா் மாற்ற முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் 26 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பிறகு 25
விண்ணப்பங்களுக்கான பெயா் மாற்ற ஆணையை கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள், நுகா்வோருக்கு வழங்கினாா். உதவிச் செயற்பொறியாளா்கள் ராமகிளி, திருசங்கா்,
இளநிலைப் பொறியாளா்கள் விஜயராஜ், மாதவன், உதவி கணக்கு அலுவலா் சண்முகசுந்தரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.