தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இரு கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவா்களது பெற்றோா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக சாத்தான்குளத்தைச் சோ்ந்த பண்டாரபுரத்தைச் சோ்ந்தவா் அளித்த மனு:
எனது மகள் சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், அவரது தோழியான கொழுந்தட்டு மேலத்தெருவைச் சோ்ந்த 20 வயது பெண், சிதம்பராபுரத்தைச் சோ்ந்த மற்றொரு பெண் என மூவரும் கடந்த 23 ஆம் தேதி வங்கிக்குச் சென்றனா். பின்னா், எனது மகளும், கொழுந்தட்டுவைச் சோ்ந்த அவரது தோழியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் துப்புத்துலங்கவில்லை. ஆகவே, எனது மகளை கண்டுபிடித்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.