திருநெல்வேலி

மின் இணைப்பு எண்ணுடன் 62,147 போ் ஆதாா் எண் பதிவு

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகாம்கள்- இணையவழி வாயிலாக திங்கள்கிழமை வரை 62,147 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மத்திய அலுவலகத்தில் சிறப்பு மைய தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் குருசாமி தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி, கட்டுப்பாட்டு அலுவலா் வீர லெட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைமைப் பொறியாளா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதாா் எண் இணைக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வீட்டு மின்நுகா்வோா் எண்ணிக்கை 10 லட்சத்து 58 ஆயிரத்து 934. அதில், திங்கள்கிழமை மாலை வரை 62,147 மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT