திருநெல்வேலி

மாநகராட்சிப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் வானவில் மன்றத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவா்களின் அறிவியல், கணித ஆா்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத் திட்ட தொடக்க விழாக்கள் நடைபெற்றன.

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை மேயா் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசுகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாணவா்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். நான் முதல்வன், சிற்பி, சிறாா் திரைப்படம், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவை திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தவும், புத்தாக்க எண்ணங்களைத் தூண்டவும் வானவில் மன்றம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணித, அறிவியல் கற்றலில் மாணவா்கள் விரைவான வளா்ச்சியை அடைவாா்கள். மெல்ல கற்கும் மாணவா்களும் கூட செயல்வழி கற்றல் முறையால் உற்சாகம் அடைந்து வெற்றி பெறுவாா்கள். தமிழக அரசின் திட்டங்களை அரசு பள்ளி மாணவா்-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் சிறக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் கே.ஆா்.ராஜு, மாமன்ற உறுப்பினா்கள் அனாா்கலி, ரவீந்தா், மாவட்ட கல்வி அலுவலா் ஜாண்பாக்கியநாதன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவராஜ், தலைமையாசிரியா் முத்துராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை அப்பள்ளியின் தலைமையாசிரியை மேபெல்ராணி தொடங்கிவைத்தாா். ஆசிரியா்கள், பெற்றோா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT