காா்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில் ஆகியவற்றிலும் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.