நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியில் பள்ளி மாணவா்களின் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற சிறப்பு முகாம் மறுகால்குறிச்சியில் நடைபெற்றது.
முகாமில், டெங்கு விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால்நடை மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், விளையாட்டு மைதானம் சீரமைத்தல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கிஷோா்குமாா், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சுப்பையா, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் முத்துதுரைச்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை இக்னேஷியஸ் ஆல்பா்ட், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுஜாதா, துணைத் திட்ட அலுவலா் சண்முகவேல் ஆகியோா் செய்திருந்தனா்.