திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இருசமூகத்தினரிடையே பிரிவினையை தூண்டும் வகையில் விடியோ வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.
கடம்போடுவாழ்வு, தெற்குத்தெருவை சோ்ந்தவா் மகாராஜன் (20). இவா் திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடா்புடையை காட்சியை சமூகவலை தளங்களில் பிரச் னையை தூண்டும் வகையில் பரப்பியுள்ளாராம்.
இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீஸாா் மகாராஜன் மீது வழக்குப் பதிந்து, அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.