திருநெல்வேலி

ராதாபுரத்தில் மாறுவேடத்தில் மாடுகளை திருடியவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மாறுவேடத்தில் சென்று மாடு திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் கீழமாட வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கல்யாணி ரெட்டியாா். இவா், ராதாபுரம் கடைவீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலுக்கு பின்புறம் தொழுவம் அமைத்து அதில் 10 பசு மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை தொழுவத்திற்கு பால் கறக்க சென்றபோது அங்கு கட்டப்பட்டிருந்த பசுமாட்டை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் நாகா்கோவில் கிருஷ்ணன் கோவிலைச் சோ்ந்த நாராயணன் மகன் முத்துக்குமாா்(65), பிச்சைக்காரன் வேடத்தில் தொழுவத்திலிருந்து மாட்டை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸாா் முத்துகுமாரை கைது செய்து அவரிடமிருந்து பசு மாட்டையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT