முக்கூடலில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சிப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், முக்கூடல் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் அஷ்ரப் அலி தலைமையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 17 கிராம ஊராட்சிப் பணியாளா்கள், ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், உறுப்பினா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனா்.
ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, ஒன்றிய ஆணையா் ராஜேஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா் பாலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.