தேவா்குளத்தில் தாய் மற்றும் குழந்தை தூக்கிட்டு உயிரிழந்தது தொடா்பாக கணவரை தேவா்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் தெரிவித்தது:
தேவா்குளம் அருகே வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் (30). பிரவீனா (25) இவா்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் அவரது மனைவி குழந்தையுடன் பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இதையடுத்து மன உளைச்சலில் இருந்த பிரவீனா கடந்த புதன்கிழமை தனது குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். பிரவீனாவை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக மகேந்திரனை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.