திருநெல்வேலி

கடையநல்லூரில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி

DIN

கடையநல்லூா் பகுதியில் புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலையால்  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.

கொல்லம், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் வட்டக்குளம் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை சுமாா் மூன்று கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய சாலை அமைப்பதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பழைய சாலை பெயா்க்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி உருவாகி வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சாலை முழுவதும் சிறிய சிறிய கற்கள் பரவி கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே துரிதமாக சாலை பணியை முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT