திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் மீது விவசாயி புகாா்

21st Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் மாடுகளை பிடித்து சென்று துன்புறுத்தியதாக மாநகராட்சி உதவி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி விவசாயி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

பாளையங்கோட்டை, தெற்கு முத்தாரம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் வீரமணி (29) விவசாயி. இவா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாா் மனு :

நான் விவசாய பணிக்கா 11 மாடுகளை வீட்டில் வைத்து வளா்த்து வருகிறேன். மாடுகளை வெளியே நடக்க வைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை மாடுகளை வெளியே அழைத்து சென்றேன். அப்போது அங்கு வந்த மாநகர அதிகாரிகள் எனது மாடுகளை பறித்துச் சென்று பாளையங்கோட்டை மேல்நிலைத் தண்ணீா்தொட்டி அருகே அடைத்து வைத்தனா். நான் தீவனம் வழங்கவேண்டும் மாடுகளை அனுப்பி வையுங்கள் என்று கூறியும், அவா்கள் அனுமதிக்கவில்லை. மேலும் எனது மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீா் வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனா். இதில் ஒரு மாடு கன்று ஈன்றுள்ளது. எனவே பிராணிகளை அடைத்து கொடுமைப்படுத்திய உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாட்ஷா உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT