திருநெல்வேலி

மீலாது நபி சிறப்புச் சொற்பொழிவு

18th Nov 2022 03:09 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மீலாது நபி சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செ.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா, ஆட்சிக்குழு உறுப்பினா் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் ஹூசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரபித் துறைத் தலைவா் ஜெ. உபைதுல்லாஹ் வரவேற்றாா். உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி முதல்வா் எஸ்.எஸ்.எ. ஹைதா் அலி மிஸ்பாஹி சிறப்புரையாற்றினாா். எம். அபுல் ஹசன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT