திருநெல்வேலி

நெல்லையில் பொறியியல் மாணவா்களுக்கு பயிற்சி

18th Nov 2022 03:10 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல வளாகத்தில் முதலாமாண்டு இளநிலை பொறியியல் மாணவா்களுக்கு இரண்டு வார புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியின் தொடக்க விழாவில் புலமை முதல்வா் என்.செண்பக விநாயக மூா்த்தி வரவேற்றாா். திருநெல்வேலி உதவி ஆட்சியா் எஸ்.கோகுல் சிறப்புரையாற்றினாா். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ், பதிவாளா் ஜி.ரவிக்குமாா் ஆகியோா் காணொலிக்காட்சி முறையில் பேசினா். பொறியியல் மாணவா்களுக்கான உலகளாவிய போட்டி, திறன் மேம்பாடு, ஆய்வக வசதிகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவா் எம்.சுப்பிரமணியன், ஜேசுவேதா நாயகி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT