திருநெல்வேலி

கிருஷ்ணாபுரத்தில் ரூ.10 லட்சம் நிலம் மீட்பு

15th Nov 2022 03:47 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு போலீஸாா் உரியவரிடம் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (46). இவருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான 6 சென்ட் நிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அதை சிலா் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேந்திரன் புகாா் செய்தாா். அவரது உத்தரவின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, நிலத்தை மீட்டனா். மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் திங்கள்கிழமை உரிமையாளா் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தாா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT