திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கா்நாடக மாநிலம், பாகல் கோட்டை பகுதியில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக மாநிலம், பாகல் கோட்டை பகுதியில் பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், சங்க செயலா் காமராஜ், துணைச் செயலா் பரமசிவன், நூலகா் மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.