திருநெல்வேலி

கல்குவாரி விபத்தில் பலியானோா் குடும்பத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

DIN

அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் பலியானோா் குடும்பத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் நிதியுதவி வழங்கினாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் நிகழ்ந்த கல்குவாரி விபத்தில் 6 போ் சிக்கினா். அவா்களில் 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 3 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவரை தேடும் பணி தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில் விபத்தில் பலியான இளையாா்குளம் செல்வன், ஆயன்குளம் முருகன், காக்கைகுளம் செல்வகுமாா் ஆகியோா் குடும்பத்தினரை நான்குனேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், பலியானோா் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா்.

அதிமுக அமைப்பு செயலா் சுதா கே.பரமசிவம், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, மாமன்ற உறுப்பினா் சந்திரசேகா், சரவணன், மலையன்குளம் சங்கரலிங்கம், ராஜேந்திரன், பி.எஸ். பரமசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT